Monday, 6 April 2015

மூன்று தலைமுறை தாண்டி .... இன்னொரு குழந்தையாய் !

மூன்று தலைமுறை தாண்டி .... இன்னொரு குழந்தையாய் !




அருவிச் சாரலின்
ஒரு  துளி தெறித்ததோ !
அன்பின் பதிவு சிலிர்க்க வைத்ததோ  !

பிஞ்சு இதழ்  பட்டவுடன்
பிரவாகம்  பொங்கி  கண்கள் நனைந்ததோ !
மெய்மறந்து , கரைந்த  கணம்
பிறந்தீரோ  மீண்டும் இப்புவியில் இருவருமே !

தீர்க்கமான பார்வை - பார்க்கத்
தீராத பரவசம்
பூவின் புத்துணர்வு
விரல் பிடித்து அழைத்துப் போகும்
பாட்டியை - மூன்று தலைமுறை தாண்டி
இன்னொரு குழந்தையாய்

தங்கமே ! வேறென்ன
உன்  பாட்டிக்கு  நீ  கொடுக்க
வாழ்க!   நீ பல்லாண்டு !

( நெய்வேலி   ச . ப . சாந்தி கவிதை )



தேவதச்சனின் ஒரு கவிதை..

எப்பவாவது 

எப்பவாவது  ஒரு 
கொக்கு பறக்கும்             நகரத்தின் மேலே 
என் 
கவசமும்  வாளும் 
உருகி  ஓடும் 
ஊருக்கு வெளியே .
( தேவதச்சனின் ஒரு கவிதை...)